கடந்த சில நூற்றாண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நம்மிடையே மாற்றங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதில், சில தொழில்நுட்பம் அதிரதடியாக புயலை போன்று புரட்டி போடும் மாறுதலை உருவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக smartphone வந்த பிறகு என்ன நடந்தது என்று பார்ப்போம் - மியூசிக் பிளேயர், பேஜர், அலாரம் கிளாக், ஜிபிஸ் சிஸ்டம் இவை இருக்கும் இடம் தெரியாமல் போனது. நவீன கேமராவிற்கு ஈடாக செல்போன் கேமரா செயல்படுவதால் கேமரா விற்பனையும் குறைந்து வருகிறது. அது மட்டுமல்லாமல், பல apps (செயலிகள்) ஏனைய மென்பொருளுக்கும் போட்டியாக உள்ளது. இவ்வகையான மாற்றத்தை disruptive transformation என்று வல்லுநர்கள் அழைப்பார்கள். இந்த வகையிலே ஒன்று தான் (முப்பரிமாண அச்சிடல்)3D Printing என்னும் தொழில்நுட்பம்.
3D Printing என்றால் என்ன ? - ஒரு சிற்பி சிலையை செய்யும் போது, முதலில் ஒரு பெரிய பாறாங்கல்லில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக தேவையில்லாத கற்பொருளை நீக்கியபின் தான் விரும்பிய சிலையை முடிப்பார். அதேபோல், தொழிற்சாலையிலும் ஒரு பெரிய உலோக படிவத்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு அதிகப்படியாக உள்ள உலோகத்தை அகற்றி தேவையான பொருளை தயாரிப்பர். 3D Printing - மேற்கூறிய முறைக்கு நேர் எதிரானது. 3D Printing முறையில் அடிப்படை பொருளை (பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கலந்த) துகள் வடிவத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கு அடுக்காக டெபாசிட் செய்து வரையறுக்கப்பட்ட உருவத்தை அடைகிறோம். இப்படியாக, பலவிதமான நுணுக்கமான அரிதான பொருட்களை தயார் செய்யமுடியும்.
இந்த 3D Printing துணைகொண்டு வீடு முதல் இயந்திரங்களின் உதிரி பாககங்கள் வரை தயாரிக்கலாம். விமானம் தயாரிப்பின் முன்னோடியான ஜெனரல் எலக்ட்ரிக், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்கள் விமான என்ஜினுக்கு தேவையான 20,000 பார்ட்ஸ் வரை 3D Printing மூலம் தயார் செய்துகொள்கிறது. அமெரிக்காவில், இன்று ஹெரிங் எயிட் முழுவதும் 3D Printing செய்யப்படுகிறது. சீனாவில் உள்ள Winsun Decoration Design Engineering என்னும் கம்பெனி Suzhou என்ற இடத்தில 3D Printing மூலம் ஒரு சிங்கள் storey வீட்டை வெறும் 24 மணி நேரத்தில் கட்டி மாஜிக் செய்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தினால் மனித உறுப்புகளையும் பிரிண்ட் முடியும் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இருதயம், ஈரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை தயாரிப்பதில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இது பூரண வெற்றி அடைந்தால் பலருக்கு உயிர் காக்கும் வரமாக அமையும்.
இருப்பினும் All is well என்று சொல்லமுடியாது. வேறு எந்த தொழில்நுட்பம் போலவே இதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. எந்த ஒரு பொருளையும் அச்சிட இயலும் என்பதால் மற்றவர் படைப்பை எளிதாக காப்பி அடித்து copyright violation அதிகரிக்கும். தீயசக்திகளின் கைக்கு கிடைத்தால் ஆயுதம்செய்ய தேவையான பொருட்களை அவரே தயாரித்துகொள்வர்.
தொழில்நுட்பத்தில் உள்ள தீயவற்றை அகற்றி நன்மைகளை பெருக்கிக்கொள்வதே புத்திசாலித்தனம்!
3D Printing என்றால் என்ன ? - ஒரு சிற்பி சிலையை செய்யும் போது, முதலில் ஒரு பெரிய பாறாங்கல்லில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக தேவையில்லாத கற்பொருளை நீக்கியபின் தான் விரும்பிய சிலையை முடிப்பார். அதேபோல், தொழிற்சாலையிலும் ஒரு பெரிய உலோக படிவத்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு அதிகப்படியாக உள்ள உலோகத்தை அகற்றி தேவையான பொருளை தயாரிப்பர். 3D Printing - மேற்கூறிய முறைக்கு நேர் எதிரானது. 3D Printing முறையில் அடிப்படை பொருளை (பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கலந்த) துகள் வடிவத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கு அடுக்காக டெபாசிட் செய்து வரையறுக்கப்பட்ட உருவத்தை அடைகிறோம். இப்படியாக, பலவிதமான நுணுக்கமான அரிதான பொருட்களை தயார் செய்யமுடியும்.
![]() |
| IMG Source: mygadgets.my |
இந்த 3D Printing துணைகொண்டு வீடு முதல் இயந்திரங்களின் உதிரி பாககங்கள் வரை தயாரிக்கலாம். விமானம் தயாரிப்பின் முன்னோடியான ஜெனரல் எலக்ட்ரிக், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்கள் விமான என்ஜினுக்கு தேவையான 20,000 பார்ட்ஸ் வரை 3D Printing மூலம் தயார் செய்துகொள்கிறது. அமெரிக்காவில், இன்று ஹெரிங் எயிட் முழுவதும் 3D Printing செய்யப்படுகிறது. சீனாவில் உள்ள Winsun Decoration Design Engineering என்னும் கம்பெனி Suzhou என்ற இடத்தில 3D Printing மூலம் ஒரு சிங்கள் storey வீட்டை வெறும் 24 மணி நேரத்தில் கட்டி மாஜிக் செய்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தினால் மனித உறுப்புகளையும் பிரிண்ட் முடியும் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இருதயம், ஈரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை தயாரிப்பதில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இது பூரண வெற்றி அடைந்தால் பலருக்கு உயிர் காக்கும் வரமாக அமையும்.
![]() |
| 3D Organ printer - Img Credit http://www.techtimes.com/articles |
இருப்பினும் All is well என்று சொல்லமுடியாது. வேறு எந்த தொழில்நுட்பம் போலவே இதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. எந்த ஒரு பொருளையும் அச்சிட இயலும் என்பதால் மற்றவர் படைப்பை எளிதாக காப்பி அடித்து copyright violation அதிகரிக்கும். தீயசக்திகளின் கைக்கு கிடைத்தால் ஆயுதம்செய்ய தேவையான பொருட்களை அவரே தயாரித்துகொள்வர்.
தொழில்நுட்பத்தில் உள்ள தீயவற்றை அகற்றி நன்மைகளை பெருக்கிக்கொள்வதே புத்திசாலித்தனம்!


Thagaval arumai machan
ReplyDeleteபுதிய தொழில் நுட்பம்.
ReplyDeleteமாற்றம் வருகிறதா என்று பொறுத்திருந்து பார்க்ககலாம்.
எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி.
Arumaiyaga thogukkapatta thagaval.
ReplyDelete